திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.300 கோடி செலவில் திட்டம்: மு.க.ஸ்டாலின் ஆலோசனை
1 min read
Rs 300 crore project at Thiruchendur Murugan Temple: MK Stalin’s advice
6.11.2021
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் கோவில்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில், திருக்கோவிலில் அடிப்படை வசதிகள், தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வியாபாரக் கடைகள், தீ அணைப்பு வாகனம் நிறுத்துமிடம், அவரச ஊா்தி, யானைகள் பாராமரிப்பு கொட்டகை, வாகனம் நிறுத்துமிடம் போன்றவற்றை மேம்படுத்துவது குறித்தும், அங்கபிரதக்ஷனம் செய்யும் பக்தா்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கீடு செய்வது தொடா்பாகவும், பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல், திருப்பதியை போன்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்வது போன்ற திட்டம் குறித்தும், அன்னதானக் கூடம் கீழ்தளம், முதல்தளம் என 1000 நபா்கள் ஒரே நேரத்தில் உணவருந்து அளவுக்கு திட்டங்கள் தயார் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.