சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை
1 min read
Government offices in Chennai will be closed tomorrow
7.11.2021
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாளை (திங்கட்கிழமை) அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது:-
கடந்த 2015 ம் ஆண்டுக்குப்பின் தற்போது சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை (8-ந் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசுதுறைகள் தவிர பிற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஆவின் ,பொது போக்குவரத்து, மின்சாரம் , மருத்துவம் உள்ளாட்சி, வருவாய் உள்ளிட்டதுறைகள் இயங்கும்
மழையை பொறுத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கலாம் அல்லது வீட்டில் இருந்து பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.