தமிழகத்தில் மழை வெள்ளம் பற்றி மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு
1 min read
Prime Minister Modi talks with MK Stalin about rain floods in Tamil Nadu
7.11.2021
சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் கன மழை குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசி விவரம் கேட்டறிந்தார்.
மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 2015 ம் ஆண்டிற்கு பின் சென்னையில் கன மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிரதமர் மோடி தொலை பேசிமூலம் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மழை விபரம் கு்றித்து கேட்டறிந்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணபணிகளில் மத்திய அரசு உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. தமிழக மக்களின் நலன், பாதுகாப்பு குறித்து பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.