தமிழகத்தில் இன்று 841 பேருக்கு கொரோனா; 6 பேர் சாவு
1 min read
Corona for 841 people in Tamil Nadu today; 6 deaths
8.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 850ல் இருந்து 841 ஆக சற்று குறைந்துள்ளது. 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 937 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,00,875 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,09,921 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 505 பேர் ஆண்கள், 336 பேர் பெண்கள். தமிழகத்தில் 937 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,63,323 ஆக உயர்ந்துள்ளது.
6 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 6 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,226 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக இருந்த நிலையில் இன்று 126 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 94 பேருக்கும், செங்கல்பட்டில் 74 பேருக்கும், ஈரோட்டில் 67 பேருக்கும், திருப்பூரில் 60 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லையில் 5 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 9 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.