தமிழகத்தில் 812 பேருக்கு கொரோனா; 8 பேர் சாவு
1 min read
Corona for 812 people in Tamil Nadu; 8 people killed
12.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 820ல் இருந்து 812 ஆக சற்று குறைந்துள்ளது. 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 927 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் 1,02,154 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 811 பேருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து வந்த ஒருவர் என 812 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,13,216 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 480 பேர் ஆண்கள், 332 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 927 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,67,067 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 8 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,259 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக இருந்த நிலையில் இன்று 114 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 108 பேருக்கும், ஈரோட்டில் 71 பேருக்கும், செங்கல்பட்டில் 59 பேருக்கும், திருப்பூரில் 52 பேருக்கும், நெல்லைியல் 16 பேருக்கும் தூத்துக்குடியில் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இன்று தென்காசி, தேனியில் இன்று கொரோனா தொற்று யாருக்கும் இல்லை.