இந்தியாவில் மேலும் 12,516 பேருக்கு கொரோனா; 501 பேர் சாவு
1 min read
Corona for a further 12,516 in India; 501 deaths
12.11.2021
இந்தியாவில் மேலும் 12,516 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளில் 501 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் ஏறுமுகம், இறங்குமுகம் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 12,516 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 13,155 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 501 பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 14 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரத்து 416 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,38,14,080 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,62,690 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 57,54,817 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 110,79,51,225 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.