July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 782 பேருக்கு கொரோனா; 13 பேர் சாவு

1 min read

Corona for 782 people in Tamil Nadu today; 13 dead

17.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 789ல் இருந்து 782 ஆக சற்று குறைந்துள்ளது. 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 907 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,01,984 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 782 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,17,203ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 463 பேர் ஆண்கள், 319 பேர் பெண்கள். இன்று 907 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,71,668 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 13பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,324 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.17 ம் தேதி)116ஆக குறைந்துள்ளது.
கோவையில் 115 பேருக்கும், ஈரோட்டில் 72 பேருக்கும், செங்கல்பட்டில் 61 பேருக்கும், திருப்பூரில் 50 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லையில் 9 பேருக்கும் தூத்துக்குடியில் 6 பேருக்கும் இன்று கொரோனா தெரியவந்துள்ளது. தென்காசி, தேனி மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.