June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 750 பேருக்கு கொரோனா; 13 பேர் சாவு

1 min read

Corona for 750 people in Tamil Nadu today; 13 dead

22.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 756ல் இருந்து 750 ஆக சற்று குறைந்துள்ளது. 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.843 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 1,01,397 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 750 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,21,021 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று உறுதியானவர்களில் 443 பேர் ஆண்கள், 307 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று. 843 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,76,017 ஆக உயர்ந்துள்ளது.

13 பேர் சாவு

தமிழகத்தில் இன்று13 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,388 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக இருந்த நிலையில் இன்று 110 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 125 பேருக்கும், ஈரோட்டில் 75 பேருக்கும், செங்கல்பட்டில் 54 பேருக்கும், திருப்பூரில் 59 பேருக்கும், நெல்லையில் 12 பேருக்கும் தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 4 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா பதிவு இல்லை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.