தமிழகத்தில் இன்று 741 பேருக்கு கொரோனா; 13 பேர் சாவு
1 min read
Corona for 741 people in Tamil Nadu today; 13 dead
23.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 750ல் இருந்து 741 ஆக சற்று குறைந்துள்ளது. 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 808 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,00,817 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,21,762 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,35,60,440 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 421 பேர் ஆண்கள், 320 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 808 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,76,825 ஆக உயர்ந்துள்ளது.
13 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 13 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,401 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக இருந்த நிலையில் இன்று 114 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 119 பேருக்கும், ஈரோட்டில் 78 பேருக்கும், செங்கல்பட்ில் 57 பேருக்கும். திருப்பூரில் 57 பேருக்கும், நெல்லையில் 14 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடி இன்று கொரோனா யாருக்கும் இல்லை.