தமிழகத்தில் இன்று 744 பேருக்கு கொரோனா; 14 பேர் சாவு
1 min read
Corona for 744 people in Tamil Nadu today; 14 dead
24.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 741ல் இருந்து 744 ஆக சற்று அதிகரித்துள்ளது. 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 782 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,01,624 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 744 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,22,506ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 438 பேர் ஆண்கள், 306 பேர் பெண்கள். இன்று 782பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,77,607 ஆக உயர்ந்துள்ளது.
14 பேர் சாவு
தமிழ்நாட்டில் இன்று 14 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,415 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 114ஆக இருந்த நிலையில் இன்று 115ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 117 பேருக்கும், ஈரோட்டில் 81 பேருக்கும், திருபூரில் 62 பேருக்கும், செங்கல்பட்டில் 59 பேருக்கும், நெல்லையில் 6 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை.