இந்தியாவில் மேலும் 9,283 பேருக்கு கொரோனா; 437 பேர் சாவு
1 min read
Corona for a further 9,283 in India; 437 deaths
25/11/2021
இந்தியாவில் மேலும் 9,283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 437 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை 8 மணிவரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 7 ஆயிரத்து 579 ஐ விட சற்று குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 949 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 45 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
437 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது.