June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மலைக்கோவில்களுக்கு ரோப் கார் பற்றி ஆய்வு – ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

1 min read

Rope car study for hill temples – Government of Tamil Nadu information in high Court

25.11.2021
மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரோப் கார்

மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை மற்றும் திருக்கழுங்குன்றம் மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து மற்ற கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ள நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.