தமிழகத்தில் இன்று 739 பேருக்கு கொரோனா; 11 பேர் சாவு
1 min read
Corona for 739 people in Tamil Nadu today; 11 people were killed
27.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 739ல் இருந்து 746 ஆக சற்று அதிகரித்துள்ளது. 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 759 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,03,258 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,23,991 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 449 பேர் ஆண்கள், 297 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 759 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,79,130 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 11 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,443 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 107ஆக இருந்த நிலையில் இன்று 103 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 113 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும், திருப்பூரில் 56 பேருக்கும், சேலத்தில் 56 பேருக்கும், செங்கல்பட்டில் 59 பேருக்கும், திருநெல்வேலியில் 6 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 4 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.