இந்தியாவில் மேலும் 10,549 பேருக்கு கொரோனா ; 488 பேர் சாவு
1 min read
Corona for another 10,549 in India; 488 deaths
26/11/2021
இந்தியாவில் மேலும் 10,549 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 488 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 9 ஆயிரத்து 119ஐ விட சற்று அதிகமாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 ஆயிரத்து 868 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 77 ஆயிரத்து 830 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
488 பேர் சாவு
இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 488 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 67 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.