July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 8,318 பேருக்கு கொரோனா; 465 பேர் சாவு

1 min read

Corona for 8,318 newcomers in India; 465 deaths

27.11.2021
இந்தியாவில் புதிதாக 8,318 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 465 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது ஏற்ற, இறக்கமாக காணப்பட்டு வருகிறது. கடந்த 24-ந் தேதி 9,283 பேருக்கும், 25-ந் தேதி 9,119 பேருக்கும், நேற்று 10,549 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. (இதில் 4,677 பேர் கேரள மாநிலத்தினர் ஆவார்கள்).

இந்நிலையில் இந்தியாவில் இன்று மேலும் 8,318 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 ஆயிரத்து 318 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,63,749 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,67,933 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10,967 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,88,797 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.34 சதவீதம் ஆக உள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,07,019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 121.06,58,262 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73,58,017 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 9,69,354 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 63,82,47,889 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.