தமிழகத்தில் இன்று 730 பேருக்கு கொரோனா; 9 பேர் சாவு
1 min read
Corona for 730 people in Tamil Nadu today; 9 deaths
29.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 736 ல் இருந்து 730 ஆக சற்று குறைந்துள்ளது. 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 767 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,00,508 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 730 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,26,197 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 440 பேர் ஆண்கள், 290 பேர் பெண்கள்.
இன்று 767 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,81,434 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,472 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.29 ம் தேதி) 105 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 106 பேருக்கம், ஈரோட்டில் 70 பேருக்கும், திருப்பூரில் 62 பேருக்கும், செங்கல்பட்டில் 50 பேருக்கும், சேலத்தில் 49 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் 7 பேருக்கும், தூத்துக்குடியல் 4 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டது. தென்காசியில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.