மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
1 min read
MK Stalin condemns suspension of 12 MPs at state level
29.11.2021
மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சஸ்பெண்டு
குளிர்காலக் கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று கூடியது. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தபடி வேளாண் சட்டம் ரத்து மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் மாநிலங்களையிலும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், எவ்வித விவாதமும் இல்லாமல் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக மாநிலங்களவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சியை சேர்ந்த 12 எம்.பிக்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இடை நீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இளமாறம் கரீம் (சிபிஎம்), பூலொ தேவி நேதம், ஷ்யா வெம்ரா, ஆர். போரா, ராஜமனி படேல், சையது நசிர் ஹூசைன், அகிலேஷ் பிரசாத் சிங், ( காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ). பினோய் விஸ்வம் (சிபிஐ) தோலா சென் &ஷாந்தா சேத்ரி (திரிணாமூல் காங்கிரஸ்), பிரியங்கா சதுர்வேதி &அனில் தேசாய், (சிவசேனா).
கண்டனம்
எதிர்க்கட்சியை சேர்ந்த 12 எம்.பிக்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இடை நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
“மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
சஸ்பெண்ட் நடவடிக்கை நாடாளுமன்றத்தின் ஜனநாயக மாண்பை குறைக்கும் செயல். சஸ்பெண்டு நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.