தமிழகத்தில் இன்று 718 பேருக்கு கொரோனா; 11 பேர் சாவு
1 min read
Corona for 718 people in Tamil Nadu today; 11 people were killed
1.12.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 720 ல் இருந்து 718ஆக சற்று குறைந்துள்ளது. 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 751 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,00,562 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 709 பேரும், கர்நாடகா- 4, மேற்கு வங்காளம்-2, ஆந்திரா -1, கேரளா -1, வங்கதேசம் -1 என வெளி நாடு மற்றும் வளி மாநிலத்திலிருந்து வந்த 9 பேர் உள்பட 718பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,27,635 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 439 பேர் ஆண்கள், 279 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 751 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,82,943 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 11பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,492 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக இருந்த நிலையில் இன்று 117 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 118 பேருக்கும், ஈரோட்டில் 64 பேருக்கும், செங்கல்பட்டில் 64 பேருக்கும், திருப்பூரில் 57 பேருக்கும் நெல்லையில் 6 பேருக்கும். தூத்துக்குடியில் 3 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசில் இன்று கொரோனா இல்லை.