சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வனப்பகுதி வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி
1 min read
Devotees are allowed to enter the Sabarimala Iyappan Temple through the forest
3.12.2021
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வனப்பகுதி வழியாக பக்தர்கள் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சபரிமலை
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது.
தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜை விழா நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் வருகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் பம்பை ஆறு உள்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியது. மேலும் எரிமேலி உள்ளிட்ட வனபகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் வனபகுதி வழியாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
மீண்டும் அனுமதி
இந்த நிலையில் தற்போது கேரளாவில் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளது. இதனால் மீண்டும் வனப்பகுதி வழியாக சபரிமலைக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் மீண்டும் பக்தர்களை எரிமேலி உள்ளிட்ட அடர்ந்த வனபகுதிகள் வழியாக அனுமதிக்க தீர்மானிக்க பட்டது.
இது குறித்து தேவசம் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், ஐயப்ப பக்தர்களை மீண்டும் பாரம்பரியமான வனபகுதி வழியாக சபரிமலை செல்ல அனுமதிப்பது பற்றி விரிவாக ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்றனர்.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் டிஜிட்டல் முறையில் காணிக்கை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.