June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் இன்று 724 பேருக்கு கொரோனா: 10 பேர் சாவு

1 min read

Corona for 724 people in Tamil Nadu today: 10 deaths

5.12.2021

தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் இன்று 1,02,068 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 30 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 743 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 85 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக இருந்த நிலையில் இன்று 131 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 124 பேருக்கும், திருப்பூரில் 65 பேருக்கும், செங்கல்பட்டில் 61 பேருக்கும், ஈரோட்டிில் 59 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லையில் 4 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 6 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.