இந்தியாவில் மேலும் 8,895 பேருக்கு கொரோனா; 2796 பேர் சாவு
1 min read
Corona for another 8,895 in India; 2796 deaths
5/12/2021
இந்தியாவில் மேலும் 8 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 2796பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு இறங்குமுகம் கண்டு வருகிறது. நேற்று காலையில் 8,603 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 948 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.
2,796 பேர் சாவு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 2,796 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பீகாரில் நேற்று முன்தினம் 2,426 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,04,18,707 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்த்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,27,61,83,065 ஆக உயர்ந்துள்ளது.