தமிழகத்தில் இன்று 719 பேருக்கு கொரோனா; 10 பேர் சாவு
1 min read
Corona for 719 people in Tamil Nadu today; 10 deaths
6.12.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 724 ல்
இருந்து 719 ஆக சற்று குறைந்துள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். 737 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,01,255 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,31,235 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 429 பேர் ஆண்கள், 290 பேர் பெண்கள். 737 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,86,683 ஆக உயர்ந்துள்ளது.
10 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 10 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,539 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக இருந்த நிலையில் இன்று 128 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 120 பேருக்கும், செங்கல்பட்டில் 59 பேருக்கும், திருப்பூரி்ல் 59 பேருக்கும், ஈரோட்டில் 58 பேருக்கும், நெல்லையில் 5 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 5 பேருக்கும், கன்னியாகுமரியில் 10 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை.