தமிழகத்தில் இன்று 710 பேருக்கு கொரோனா; 10 பேர் சாவு
1 min read
Corona for 710 people in Tamil Nadu today; 10 deaths
7.12.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 719 ல் இருந்து 710 ஆக சற்று குறைந்துள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். 731 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,00,393 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 708 பேரும் மேற்குவங்காள மாநிலத்திலிருந்த வந்த 2 பேரையும் சேர்த்து 710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,31,945 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 411 பேர் ஆண்கள், 299 பேர் பெண்கள். இன்று 731 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,87,414 ஆக உயர்ந்துள்ளது.
10 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 10 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,549 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக இருந்த நிலையில் இன்று (டிச.,07 ம் தேதி) 126 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 122 பேருக்கும், செங்கல்பட்டில் 57 பேருக்கும், ஈரோட்டில் 56 பேருக்கம், திருப்பூரில் 52 பேருக்கும், திருநெல்வேலியில் 4 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 3 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா பதிவு இல்லை.