தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா; 11 பேர் சாவு
1 min read
Corona for 688 people in Tamil Nadu today; 11 people were killed
10/12/2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 698 ல் இருந்து 688 ஆக சற்று குறைந்துள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 739 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,03,017 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 687 பேரும் மேற்குவங்க மாநிலத்திலிருந்து வந்த ஒருவரையும் சேர்த்து 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,34,034 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 415 பேர் ஆண்கள், 273 பேர் பெண்கள். இன்று 739 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,89,627 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 5 பேரும், அரசு மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,586 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக இருந்த நிலையில் இன்று 123 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 110 பேருக்கும், ஈரோட்டில் 59 பேருக்கும், செங்கல்பட்டில் 52 பேருக்கும், நெல்லையில் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 2 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தென்காசி, விருதுநகர், தேனி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா பதிவு இல்லை.