தமிழகத்தில் இன்று 607 பேருக்கு கொரோனா; 8 பேர் சாவு
1 min read
Corona for 607 people in Tamil Nadu today; 8 people killed
23/12/2021
தமிழகத்தில் இன்று 607 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 689 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,03,938 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 596 பேரும் ஐரோப்பிய நாடுகள்,இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த தலா இரண்டு பேர், ஆந்திராவில்-3 பேரும் மேற்குவங்கம் மாநிலத்திலிருந்து வந்த 2 பேர் என மொத்தம் 607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,42,224 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 336பேர் ஆண்கள், 271 பேர் பெண்கள். 689 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,98,628 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 8பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,707 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக இருந்த நிலையில் இன்று 145ஆக சற்று அதிகரித்துள்ளது.
கோவையில் 92 பேருக்கும், செங்கல்பட்டில் 56 பேருக்கும், ஈரோட்டில் 45 பேருக்கும், திருப்பூரில் 43 பேருக்கும், நெல்லையில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 7 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனா இல்லை