June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 7,495 பேருக்கு கொரோனா; 434 பேர் சாவு

1 min read

Corona for 7,495 newcomers in India; 434 deaths

23.12.2021

இந்தியாவில் புதிதாக 7,495 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 434 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும்கூட தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் அடங்கி விடுகிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 5,326 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று இது சிறிதளவு அதிகரித்து 6,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றைவிட 18.6 சதவீதமாக உயர்வாகும். (இதில் கேரளாவில் மட்டும் 3,205 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 495 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,65,976 ஆக அதிகரித்துள்ளது.

434 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 434 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,78,759 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.38 சதவீதமாக உள்ளது.

இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 6,960 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,42,08,926 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.40 சதவீதமாக ஆக உள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு கடந்த 573 நாட்களில் குறைந்தபட்ச அளவாக 78,291 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,39,69,76,774 பேருக்கு (நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,17,671 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 12,05,775 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 66,86,43,929 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இதனிடையே தற்போது இந்தியாவின் மொத்த ஒமைக்ரான பாதிப்பு எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.