June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா; 10 பேர் சாவு

1 min read

Corona for 610 people in Tamil Nadu today; 10 deaths

26.12.2021
தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். 679 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 1,00,284 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 602 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து வந்த 6 பேருக்கும் ,கென்யா மற்றும் கானா நாட்டிலிருந்து வந்த தலா ஒருவரையும் சேர்த்து மொத்தம் 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,44,037 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 354 பேர் ஆண்கள், 256 பேர் பெண்கள். தமிழ்நாட்டில் 679 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,00,673 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 10 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,735 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக இருந்த நிலையில் இன்று 171ஆக சற்று அதிகரித்துள்ளது.
கோவையில் 89 பேருக்கும், செங்கல்பட்டில் 48 பேருக்கும், ஈரோட்டில் 45 பேருக்கும், திருப்பூரில் 40 பேருக்கும், நெல்லையில் 5 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், துத்துக்குடியில் 5 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.