June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இன்று முதல் 2 வாரங்களுக்கு காணொலி வாயிலாகவே வழக்கு விசாரணை; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

1 min read

Case trial via video for the first 2 weeks from today; Notice of the Supreme Court

2/1/2022
நாளை முதல் 2 வாரங்களுக்கு காணொலி வாயிலாகவே வழக்கு விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

டெல்டா வைரஸ்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலையில் மோசமான பாதிப்புகளை ஆரம்பத்தில் சந்தித்தபோதும், மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால், நாடு மீண்டு வந்தது. இந்த நிலையில் பேரிடியாக ஒமைக்ரான் வைரஸ் வந்துள்ளது. 2-வது அலையில் டெல்டா வைரஸ் பிடித்திருந்த இடத்தை இந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது பிடித்து வருகிறது.

அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளில் இந்த வைரஸ் பரவல் மிகுந்த வேகம் எடுத்துள்ள போதிலும், அவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தற்போது அதன் வேகம் மிதமாகவே இருக்கிறது. எனினும், நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரிக்கத்து வருகிறது.

2 வாரங்களுக்கு…

கொரோனா பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோன பரவல் காரணமாக நாளை முதல் 2 வாரங்களுக்கு காணொலி வாயிலாகவே வழக்கு விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.