June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆன்லைன் விளையாட்டால் கடன்; மனைவி, குழந்தைகளை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை

1 min read

Credit from online games; Bank official commits suicide by killing wife, children

2.1.2022
பெருங்குடி பகுதியில் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தனியார் வங்கி அதிகாரி மணிகண்டன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன் லைன் விளையாட்டு

இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. கடந்த காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் சென்று விளையாடுவதை விரும்பினர்.

ஆனால் இளைய தலைமுறையினர் வீட்டுக்குள்ளேயே செல்போன் மூலம் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அவர்கள் பணம் கட்டி ஏமாறும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகிறது.

அந்த வகையில் சென்னை அருகே பெருங்குடி பகுதியில் கடன் தொல்லையால் மனைவி 2 குழந்தைகளை கொன்று விட்டு வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மணிகண்டன் பலரிடம் கடன் வாங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.