புதிய கல்விக்கொள்கையில் விளையாட்டிற்கு முக்கியத்துவம்; பிரதமர் மோடி பேச்சு
1 min read
The importance of sport in the new education policy; Prime Minister Modi’s speech
2/1/2021
புதிய கல்விக்கொள்கையில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில், மேஜர் தயான்சந்த் பெயரில் அமையும் விளையாட்டு பல்கலைக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
விளையாட்டு விருது
நாட்டில் உயர்ந்த விளையாட்டு விருதுக்கு மேஜர் தயான்சந்த் பெயர் சூட்டப்பட்டது. தற்போது மீரட்டில் அமையும் விளையாட்டு பல்கலை அவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. 700 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த பல்கலை, இளைஞர்களுக்கு சர்வதேச அளவிலான விளையாட்டு வசதிகளை அளிக்கும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இங்கு பட்டம் பெறுவார்கள். முன்னர், கிரிமினல்கள், மாபியாக்கள் மட்டுமே, சட்டவிரோத நில அபகரிப்பில் ஈடுபட்டனர்.
புதிய கல்விக் கொள்கை
விளையாட்டு சாதனங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு இணையாக விளையாட்டும் கற்று கொடுக்கப்படும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்த விழாவில் உத்தரபிதேச முதல்வர் யோகி.ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.