June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

பேரக் குழந்தையின் தொட்டிலில் விளையாடியவர் கழுத்து இறுக்கி சாவு

1 min read

Grandfather dies while grasping rope while swinging grandchild in cradle

3.1.2022
அரியமங்கலத்தில் பேரக் குழந்தையின் தொட்டிலில் விளையாடியவர் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொட்டிலில் குழந்தை

திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகரை சேர்ந்தவர் லிங்கன் வயது (40) இவரது குடும்பத்தினர் வெளியே சென்று விட்டதை அடுத்து வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தனது பேரக் குழந்தை தொட்டிலில் தலையை மட்டும் வைத்து விளையாடியுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக கழுத்தில் இறுக்கியுள்ளது. இதனால் அவர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெளியே சென்று மாலை வீடு திரும்பிய குடும்பத்தினர் தொட்டிலில் கழுத்தில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அரியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் முதல்கட்ட விசாரணையில் அவர் மதுபோதையில் குழந்தையின் தொட்டிலில் தலையை வைத்து விளையாடி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

பேரக் குழந்தையின் தொட்டிலில் விளையாடிய 40-வயது நபர் கழுத்து இறுக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.