“மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய வீரமங்கை ராணி வேலுநாச்சியார்” ; பிரதமர் மோடி தமிழில் டுவீட்
1 min read
“Veeramangai Rani Velunacharya who realized the glory of women’s power”; Prime Minister Modi tweeted in Tamil
3/1/2022
மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய வீரமங்கை ராணி வேலுநாச்சியாரை அவரது பிறந்த நாளில் நினைவு கூறுகிறேன் என பிரதமர் கூறினார்.
வேலுநாச்சியார்
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. ஜான்சிராணிக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரம் மிக்க பெண்மணியான வேலுநாச்சியாரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
“வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன்” என்று கூறியுள்ள மோடி, அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
“அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்” என்றும் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
“வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.