இந்தியாவில் மேலும் 58,097 பேருக்கு கொரோனா; 534 பேர் சாவு
1 min read
Corona for another 58,097 in India; 534 deaths
5/1/2022
இந்தியாவில் ஒரே நாளில் தினசரி கொரோனா பாதிப்பு 58,097 பேராக உயர்ந்தது. 534 பேர் இறந்தனர்.
அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை 33,750 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 37,379 கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 58,097 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.50 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 4.18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 15,389 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்னிக்கை 3,43,21,803 ஆக உயர்ந்துள்ளது.
534 பேர் சாவு
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 534 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,82,551 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,14,004 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து 828 பேர் குணமடைந்த நிலையில் 1,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக ஒமைக்ரான் பாதிப்பு பதிவான மாநிலங்கள் விவரம்;-
மராட்டியம் – 653, டெல்லி -464, கேரளா – 185, குஜராத் – 154, ராஜஸ்தான் -174 பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது.