June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4,862 ஆக அதிகரிப்பு; 9 பேர் சாவு

1 min read

Corona infestation increases to 4,862 in Tamil Nadu; 9 deaths

5/1/2022
தமிழகத்தில் இன்று 4,862 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். 688பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 2,731 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 4,862 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,17,382 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 4,824 பேர், இலங்கை -2, ஐக்கிய அரபு எமிரேட்-6, வங்கதேசம் மற்றும் கானா இருந்து வந்த தலாஒருவரும், மேற்குவங்கம் 19, பீகார் -4, ஆந்திரா 1, டெல்லி, கர்நாடகா, உ.பி., ம.பி., மாநிலத்திலிருந்து வந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 4,862 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,60,449 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,79,74,615 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 2,893 பேர் ஆண்கள், 1,969 பேர் பெண்கள். இன்று 688 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,07,058 ஆக உயர்ந்துள்ளது.

9 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,814 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,489 ஆக இருந்த நிலையில் இன்று (ஜன.5 ம் தேதி) 2,481 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 596 பேருக்கும், கோவையில் 259 பேருக்கும், திருவள்ளூரில் 209 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 127 பேருக்கும், வேலூரில் 184 பேருக்கும், தூத்துக்குடியில் 123 பேருக்கும், கன்னியாகுமரியில் 97 பேருக்கும், நெல்லையில் 21 பேருக்கும், தென்காசியில் 9 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.