தமிழகத்தில் இன்று 20,911 பேருக்கு கொரோனா; 25 பேர் சாவு
1 min read
Corona for 20,911 people in Tamil Nadu today; 25 deaths
14.1.2022
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 17,934 இல் இருந்து 20,911 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
1,56,402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,911 ஆக உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 8,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் 20,886 வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேர் என 20,911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1-ம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது (ஜனவரி.13 தேதி) 20,911 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 6.235 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,27,960 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 89,959 இல் இருந்து 1,03,610 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,03,810 ஆக உயர்ந்துள்ளது.
25 பேர் சாவு
கொரோனாவால் மேலும் 25 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,930 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 12 பேரும் தனியார் மருத்துவமனையில் 13 பேரும் உயிரிழந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,372 ஆக இருந்த நிலையில் இன்று (ஜன.13 ம் தேதி) 8,218 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 2,030 பேருக்கும், கோவையில் 1162 பேருக்கும், திருவள்ளூரில் 901 பேருக்கும், நெல்லையில் 415 பேருக்கம், தென்காசியில் 153 பேருக்கும், தூத்துக்குடியில் 343 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.