கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்; பிரதமர் மோடி பேச்சு
1 min read
The only weapon that can protect us from the corona is the vaccine; Prime Minister Modi’s speech
13/1/2022
கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்றும் விழிப்புடன் இருங்கள் என்றும் மாநில முதல்-மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் ஆலோசனை
நாடு முழுவதும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
மாநில முதல்-மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியாவில் 92 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 70 சதவீதம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி. நாட்டில் தொண்ணூற்று இரண்டு சதவீத வயது வந்தோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
முந்தைய கொரோனா தொற்றுகளுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவுகிறது. பதற்றமடைய வேண்டாம், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.