தமிழகத்தில் இன்று 28,561 பேருக்கு கொரோனா; 39 பேர் சாவு
1 min read
Corona for 28,561 people in Tamil Nadu today; 39 deaths
20.1.2022
தமிழகத்தில் இன்று 28,561 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 39 பேர் உயிரிழந்துள்ளனர். 19,978 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 28,561 ஆக சற்று அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,54,912 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 28,547 பேர், மற்றும் இங்கிலாந்து சென்று திரும்பியவர் ஒருவரும் ஆந்திர மாநிலம் 6, மேற்குவங்கம் மற்றும் ஒடிசா சென்று திரும்பியவர்கள் தலா இருவரும் கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 28,561 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,42,796 ஆக அதிகரித்து
உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 16,234 பேர் ஆண்கள், 12,327 பேர் பெண்கள். தமிழகத்தில் 19,978 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,26,479 ஆக உயர்ந்துள்ளது.
39 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 39 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,112 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,007 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 20 ம் தேதி) 7,520 ஆக சற்று குறைந்துள்ளது.
கோவையில் 3390 பேருக்கும், செங்கல்பட்டில் 2196 பேருக்கும், கன்னியாகுமரியில் 1148 பேருக்கும், நெல்லையில் 756 பேருக்கும், தென்காசியில் 221 பேருக்கும், தூத்துக்குடியில் 323 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.