June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 29,870 பேருக்கு கொரோனா; 33 பேர் சாவு

1 min read

Corona for 29,870 people in Tamil Nadu today; 33 dead

21.1.2022
தமிழகத்தில் இன்று 29,870 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 33 பேர் உயிரிழந்துள்ளனர். 21,684 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 29,870 ஆக சற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,54,282 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 29,848 பேர், மற்றும் நைஜீரியா சென்று திரும்பியவர் ஒருவரும் ஆந்திர மாநிலம் 10, தெலங்கானா 5, மேற்குவங்கம் 3, ராஜஸ்தான், பீகார் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 29,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,72,666 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 16,884 பேர் ஆண்கள், 12,986 பேர் பெண்கள். தமிழகத்தில் 21,684 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,48,163 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 33 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,145 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,520 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 21 ம் தேதி) 7,038 ஆக சற்று குறைந்துள்ளது.

கோவையில் 3653 பேருக்கும், செங்கல்பட்டில் 2250 பேருக்கும், கன்னியாகுமரியில் 1248 பேருக்கும், சேலத்தில் 1009 பேருக்கும், தஞ்சையில் 1016 பேருக்கும், நெல்லையில் 754 பேருக்கும், தென்காசியில் 157 பேருக்கும் தூத்துக்குடியில் 405 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.