June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல்

1 min read

74,416 candidates filed nominations in urban local body elections

3.2.2022
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 74,416 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி நேற்று (4-ம் தேதி) நிறைவடைந்தது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநகராட்சி வார்டு – 14,701, நகராட்சி-23,354, பேரூராட்சி -36,361 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.