60 சமூக வலைதள கணக்குகள் முடக்கம்
1 min read
Freezing of 60 social web accounts
10.2.2022
ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தின் போது, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் விஷயத்தில் அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது. தேசத்துக்கு விரோதமான வகையில் போலி செய்திகளை பரப்பிய 60க்கும் மேற்பட்ட, ‘யு டியூப், டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூகவலைதள கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.
இந்த, ‘யு டியூப் சேனல்’கள் பாக்., நிதி உதவியுடன் செயல்பட்டு வந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.