இந்தியாவில் புதிதாக 50,407 பேருக்கு கொரோனா; 804 பேர் சாவு
1 min read
Corona for 50,407 newcomers in India; 804 deaths
12.2.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சரிந்து வருகிற. ஒரேநாளில் புதிதாக 50,407 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியா கொரோனா தொற்றின் 3-வது அலையை வீழ்த்தும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தினசரி தொற்றுபாதிப்பு, மருத்துவமனை சேர்க்கை சரிகிறது. கடந்த வியாழக்கிழமை நாடு முழுவதும் 67 ஆயிரத்து 84 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 77 ஆக சரிந்தது.
இந்நிலையில் இன்று புதிதாக 50,407 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 13 சதவீதம் குறைவானதாகும். இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 ஆயிரத்து 407 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,25,86,544 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 804 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,07,981 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,36,962 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,14,68,120 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.37 சதவீதமாக உள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 6,10,443 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,72,29,47,688 பேருக்கு (ஒரு நாளில் மட்டும் 46,82,662 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 14,50,532 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 74,93,20,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.