ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
1 min read
12 Rameswaram fishermen arrested by Sri Lanka Navy
13.2.2022
ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் அதிகமான விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் தனுஷ் கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் மீன்பிடிக்க சென்ற நிலையில் தற்போது 12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.