July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,296 பேருக்கு கொரோனா; 11 பேர் சாவு

1 min read

Corona for 2,296 people in Tamil Nadu today; 11 people were killed

13.2.2022
தமிழகத்தில் இன்று 2,296 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா வைரசின் 3-வது அலை உச்சம் பெற்று தணியத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு மளமளவென சரிந்து வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், தமிழகத்தில் அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.

மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று 2,296 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 36 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 8,229 பேர் குணம் அடைந்துள்ளனர்.

11 பேர் சாவு

தொற்று பாதிப்புக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 02 ஆயிரத்து 916 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 461 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 47 ஆயிரத்து 643 ஆக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.