தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோன; 14 பேர் சாவு
1 min read
Corona to 1,325 people in Tamil Nadu today; 14 dead
15.2.2022
தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 14 பேர் உயிரிழந்துள்ளனர். 5,894 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 1,634 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 1,325 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 85,969 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,325 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,39,221 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,34,77,508 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 801 பேர் ஆண்கள், 524 பேர் பெண்கள். 5,894 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,69,907 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 14 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,946 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 341 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 15 ம் தேதி) 303 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் 13 பேருக்கும், தென்காசியில் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 9 பேருக்கும் இன்று கொரோனா பதிவாகி இருந்தது.