ரவிதாஸ் ஜெயந்தி: டெல்லியில் உள்ள ரவிதாஸ் மந்திரில் பிரதமர் மோடி பிரார்த்தனை
1 min read
Ravidas Jayanti: Prime Minister Modi prays at the Ravidas Mandir in Delhi
16.2.2022
ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி கரோல்பாக்கில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஸ்ரம் தாம் மந்திரில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்.
ரவிதாஸ்
சீக்கிய மதத்தை சேர்ந்த குரு ரவிதாஸ் ஒரு இந்திய ஆன்மிகவாதி, கவிஞர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் ஆன்மிக குரு ஆவார், அவர் பக்தி இயக்கத்தின் போது பக்தி பாடல்கள், வசனங்கள், ஆன்மிக போதனைகள் போன்ற குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்தார். இன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரவிதாஸின் 645வது பிறந்தநாள் ஆகும்.
ரவிதாஸ் சாதி அமைப்பை தீவிரமாக எதிர்த்தார், மத நல்லிணக்கம், ஆன்மிக சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை ஊக்குவித்தார். ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜனம் ஆஸ்தான் என்பது அவர் பிறந்த இடத்திற்கு வழங்கப்பட்ட பெயர். அவர் மீரா பாயின் ஆன்மிக வழிகாட்டியாகவும் இருந்தார்.
மோடி பிரார்த்தனை
இந்த நிலையில், ரவிதாஸ் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி கரோல்பாக்கில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஸ்ரம் தாம் மந்திரில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். அதன் பின் நடைபெற்ற ‘சபத் கீர்த்தனை’யிலும் பங்கேற்றார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “சாந்த் ரவிதாஸ் ஜியின் புனிதத் தலத்தைப் பற்றிய சில விஷயங்களை நான் நினைவுபடுத்துகிறேன். 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், அங்கு தரிசனம் செய்து ‘லங்கர்’ செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த யாத்திரைத் தளத்தின் வளர்ச்சிப் பணிகளில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்று எம்.பி.யாக நான் முடிவு செய்திருந்தேன். ஒவ்வொரு அடியிலும், திட்டத்திலும் குரு ரவிதாஸின் உணர்வை அரசாங்கம் உள்வாங்கியுள்ளது” என பதிவிட்டுள்ளார்.