June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,310 பேருக்கு கொரோனா; 10 பேர் சாவு

1 min read

Corona for 1,310 people in Tamil Nadu today; 10 deaths

16.2.2022
தமிழகத்தில் இன்று 1,310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். 5,374 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று(பிப்ரவரி 15 ம் தேதி) 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 16ம் தேதி) பாதிப்பு 1,310 ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 85,579மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,310 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,40,531 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 768 பேர் ஆண்கள், 542 பேர் பெண்கள். 5,374 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,75,281 ஆக உயர்ந்துள்ளது.

10 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 10 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,956 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 303 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 16 ம் தேதி) 296ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் 12 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.