தமிழகத்தில் இன்று 1,252 பேருக்கு கொரோனா; 6 பேர் சாவு
1 min read
Corona for 1,252 people in Tamil Nadu today; 6 deaths
17.2.2022
தமிழகத்தில் இன்று 1,252 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4,768 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று(பிப்ரவரி 16 ம் தேதி) 1,310 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 17ம் தேதி) பாதிப்பு 1,252 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 83,861 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,252 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,41,783 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 740 பேர் ஆண்கள், 512 பேர் பெண்கள். 4,768 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,80,049 ஆக உயர்ந்துள்ளது.
6 பேர் சாவு
தமிழகத்தில் 6 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,962 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 296 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 17 ம் தேதி) 285 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் இன்று 15 பேருக்கும், தென்காசியில் 7 பேருக்கும், தூத்துக்குடியில் 17 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.