July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

முல்லை பெரியாற்றில் புதிய அணை- கேரள சட்டசபையில் கவர்னர் உரை

1 min read

New dam at Mulla Periyar – Governor’s speech in the Kerala Assembly

18.2.2022
முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டப்படும் கேரள சட்டசபையில் கவர்னர் உரையில் கூறியுள்ளார்.

கவர்னர் உரை

கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் ஆதரவாக நின்றது. அரசு தொற்று நோயை மிகச் சிறப்பாகக் கையாண்டது. மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. அரசின் 100 நாள் செயல் திட்டம் வெற்றி பெற்று உள்ளது.

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வேண்டும், இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியமானது. மேலும், புதிய அணையைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நிலையான வளர்ச்சி குறிகாட்டிகளில் கேரளா முன்னணியில் உள்ளது. நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலம் கேரளா. நிதி ஆயோக்கின் வளர்ச்சிக் குறியீட்டில் மாநிலத்தில் சுகாதாரத் துறை முதலிடத்தில் உள்ளது. அனைவருக்கும் வீடு, நிலம் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது கவர்னர் உரையில் புதிய அணை கட்டப்படும் என்பது இடம் பெற்றுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.