June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

5 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு- தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

1 min read

Re-registration in 5 wards – Tamil Nadu Election Commission announcement

20.2.2022
தமிழகத்தில் 5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதும் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு 50 சதவீதத்தை கூட தொடவில்லை. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொன்றையும் பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைத்தனர்.

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. மாநிலம் முழுவதும் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  1. சென்னை மாநகராட்சியில் வார்டு எண் 51, வாக்குச்சாவடி எண். 1174.
  2. சென்னை மாநகராட்சியில் வார்டு எண் 179, வாக்குச்சாவடி எண் 5059.
  3. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17, வாக்குச்சாவடி எண் 17.
  4. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு எண் 16, வாக்குச்சாவடி எண் 16 எம், 16 டபிள்யூ.
  5. திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25, வாக்குச்சாவடி எண். 57 எம், 57 டபிள்யூ.

ஆகிய 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.

கடைசி ஒரு மணி நேரமான 5 மணி முதல் 6 மணிவரை கோவிட் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்க உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.