தமிழகத்தில் இன்று 223 பேருக்கு கொரோனா; ஒருவர் சாவு
1 min read
orona for 223 people in Tamil Nadu today; One is death
5.3.2022
தமிழகத்தில் இன்று 223 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 705 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச். 04 ம் தேதி) 261பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (மார்ச் 05 ம் தேதி) பாதிப்பு 223 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
கொரோனா
தமிழகத்தில் 51,796 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 222 பேரும் மற்றும் மலேசியா நாட்டிற்கு சென்று திரும்பிய ஒருவரையும் சேர்த்து 223 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,50,817 ஆக அதிகரித்து உள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 128 பேர் ஆண்கள், 95 பேர் பெண்கள்.
இன்று 705 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,09,674 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,012 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 76 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 04 ம் தேதி) 67 ஆக குறைந்துள்ளது.